யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விழிப்புணர்வு பதிவு.

யாழ்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த கதிரவேலு ரகுராம் எனும் நபர் முகநூலில் தன்னை வைத்தியர் என போலியாக விளம்பரம் செய்கிறார்.

இவர் எந்தவித அடிப்படை தகுதியினையோ, அல்லது மருத்துவ கல்வியினையோ கற்கவில்லை என்பதோடு இலங்கையின் எந்தஒரு மருத்துவ சபையிலும் பதிவு செய்யபடாத ஒருவராவார்.

தான் ஒரு அக்குபஞ்சர் வைத்தியர் என்றும், அதியச சக்தி கொண்டவர் , நாடியை கட்டுபடுத்தி வைத்தியம் செய்பவர் என்றும் பல்வேறு வடிவங்களில் தன்னை விளம்பரப்படுத்தி மக்களிடம் பணமோசடி செய்கிறார்.

மேற்படி நபரின் கருத்துகள் விஞ்ஞான ரீதியில் ஆதாரமற்றதும், அடிப்படை அறிவற்றதும், மோசடியானதுமாகும்.

இவரின் பொய்களை நம்பி இவரிடம் சென்ற பலர் உயிரிழந்து இருப்பதுடன், அண்மையில் இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர், இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் மருத்துவ முறைகள் சம்மந்தமாக தவறாக செய்யும் பிரசாரங்களுக்கு எதிராக எதிகாலத்தில் நடவடிக்கை எடுப்பதற்க்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகின்றது

இவர் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருப்பதுடன், தங்கள் நோய்களுக்கு சரியான மருத்துவரினை நாடி சிகிச்சை பெறுமாறு யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டிகொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.