பல்கலைக்கழக மாணவன் ரயிலில் மோதி மரணம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கில் வசிக்கும் 24 வயதான பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.