பஞ்சாப்பை 24 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு.

மொகாலியில் நேற்றைய தினம் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 46 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி போராடி 41 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பஞ்சாப் அணி 150 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.