இந்தியர்கள் , இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம்..- மத்திய வங்கி ஆளுநர்.

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையிலும் பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

கொழும்பில் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.