அல்லைப்பிட்டியில் காருடன்,  மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் பலி (படங்கள்)

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதி,  அல்லைப்பிட்டியில் காருடன்,  மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள்  இருவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ,  அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காரில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த நால்வர்  படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.