தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் காலமானார்.

74 வயதான  தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் குண்டூரில் இன்று காலமானார். 

1988 முதல் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த ஜெயபிரகாஷ் ரெட்டி,  பெரும்பாலான படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ஜெயபிரகாஷ் ரெட்டி, நகைச்சுவை வேடங்களிலும் பரிமளித்தார். அவர் கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான சரிலேறு நீகேவரு என்ற படத்தில்  நடித்திருந்தார்.

தமிழிலும்  இவர் நடித்துள்ளார்.  ஆஞ்சநேயா (2013). இவரின் முதல் படம் .  ஆறு, சின்னா, தர்மபுரி, திரு ரங்கா, உத்தம புத்திரன் எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகப் பிரபலங்கள் ஜெயபிரகாஷ் ரெட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

சிலோன் மிரர் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்..

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக.

Leave A Reply

Your email address will not be published.