வடக்கு, கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களின் ஆளுநர்களைப் பதவி விலகுமாறு அறிவித்தல்!

நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது எனத் தெரியவருகின்றது.

வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களுக்கே இவ்வாறு இராஜிநாமா செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதும் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயம் என்றும், அது பிரதமர் வெளியேறிய பின்னர் அமைச்சரவை கலைவதைப் போன்றதாகும் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்தின் படி ஆளுநர்கள் பதவி விலகாததால் அவர்கள் சுயேச்சையாகப் பதவி விலகும் வரை ஜனாதிபதி சில காலம் காத்திருந்தார் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியதும் நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.