உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வெடுக்குநாறிமலையில் சரத் வீரசேகர தெரிவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் சரத் வீரசேகர எம்.பி. தலைமையிலான குழுவினர் நேற்றுச் சென்றனர்.

மலையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அவர் மலையில் சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆலயத்தில் நேற்று இந்து சமயப்பேரவையின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையால் ஆலய நிர்வாகத்தினரும் அங்கு கூடியிருந்தனர்.

இதன்போது பிரதான காட்டுப் பாதையூடாக ஆலயத்துக்கு வருகை தருவோர் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உள்வர வேண்டாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மழை காரணமாக ஆலய வளாகத்தில் போடப்பட்ட தற்காலிக கொட்டகையையும் உடன் அகற்றுமாறும் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.