அமைச்சுப் பதவி தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் ஜனாதிபதி! – மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்கள் குமுறல்.

அமைச்சுப் பதவிகள் தருவதாகக் கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்களை ஏமாற்றிவிட்டார் என்று ‘மொட்டு’க் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

10 அமைச்சுப் பதவிகளை அவர்கள்ஏற்கனவே கேட்டிருந்தனர். இன்று தருகின்றேன், நாளை தருகின்றேன் என்று
கூறி ஜனாதிபதி பல மாதங்களாக இழுத்தடித்து வருகின்றார்.

இதனால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ள மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்கள் இனி அமைச்சுப் பதவிகள் கேட்டு ஜனாதிபதிக்குப் பின்னால் செல்லப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.