இன்று நள்ளிரவு முதல் அவசர ரயில் வேலை நிறுத்தம்..

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ஒருவரை புகையிரத பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு நியமித்தமைக்கு எதிராக தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தரை குறித்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என தொடர்ச்சியாக அறிவித்திருந்த போதிலும், குறித்த செயலாளர் சங்கத்தின் நிறைவேற்று சபையினால் இந்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகளும் சேவையில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.