திருமலையில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நிகழ்வு.

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகைதரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தபோதும் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த இடம் மாவட்ட அரசாங்க அதிபரினால் தவிர்க்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்களினாலும்இ சிங்கள மக்களாலும் திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு குறித்த தடை விதித்த பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து தமது சமய நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.