முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த இரண்டு பொலிஸாருக்குச் சிக்கல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் குடித்த கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிராக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கஞ்சி வழங்கல் இடம்பெற்ற போது யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் பெற்றுக் குடித்தனர்.

இந்த ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. பின்னர் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்தே இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்கள் மீது உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.