விஷச்சாராய மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அதிமுக இன்று போராட்டம்

விஷச்சாராய மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

விஷச் சாராயம் அருந்தி 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக-வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த வாரத்தில் மனு அளித்தனர். இந்நிலையில், விஷச் சாராய விவகாரம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். கோவை பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.