அறிவுறுத்தல் : டெங்குவால் உயிரிழக்காமல் இருக்க உடனடியாக செய்ய வேண்டியது! – வைத்தியர் தமயந்தி இடம்பிட்டிய.

டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லாமையால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், டெங்கு நோயாளியாக இருந்தால், அந்த நேரத்தில் ஏற்படும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என விசேட வைத்திய நிபுணர் தமயந்தி இடம்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், 48 மணி நேரம் காத்திருக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

வைத்தியசாலையில் நோயாளி அனுமதிக்கப் பட்ட போதிலும் இவ்வாறானவர்கள் காலதாமதமாக வைத்தியசாலைக்கு வருவதே பெரும்பாலான டெங்கு மரணங்களுக்கு காரணம் எனவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 மணி நேரம் கடந்த பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 38000 ஐ தாண்டியுள்ளதுடன் , இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.