மீண்டும் கனமழை… ஐபிஎல் இறுதிப் போட்டி மீண்டும் நிறுத்தம்!

மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 03 பந்துகள் மட்டுமே விளையாடியது. ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இன்னிங்ஸில், ​​ரிதுராஜ் ஒரு பவுண்டரியுடன் 04 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

தற்போது மைதானம் மூடப்பட்டு விட்டது

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.