வடக்கில் வீதி விபத்துக்களால் மே மாதம் 16 பேர் பரிதாப மரணம்!

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து தெரியவருகின்றது.

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களில் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இந்த மாதத்தில் அது அதிகம் என்று பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

வீதி ஒழுங்குகளைப் பேணாமல் செல்வது, அதிகரித்த வேகத்தில் பயணிப்பது மற்றும் தலைக்கவசம் முறையாக அணியாமல் பயணிப்பது என அதிகரிக்கும் வீதி விபத்துக்கான காரணங்களை பொலிஸார் பட்டியலிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருமாக 16 பேர் இந்த மாதத்தில் முதல் 29 நாள்களிலும் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.