மும்பையில் இடம் பெற்ற , சண் தவராஜாவின் காணாமல் போனவர்கள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழும் ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய காணாமல் போனவர்கள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மும்பை இலக்கியக் கூடத்தின் ஏற்பாட்டில் மும்பை மாநகரிலுள்ள பாண்டுப், பிரைட் மேல்நிலைப்பள்ளி, வி.தேவதாசன் கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்தை குழந்தை கெனிசா பழனி விக்னேசு இசைக்க வரவேற்புரையை மும்பை இலக்கியக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் வழங்கினார்.

வெளியீட்டு நிகழ்வில், முதல் பிரதியை இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் அறிமுக உரை நிகழ்த்தி வெளியிட மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை தி.மு.க.வின் மும்பை பொறுப்பாளர் எழுத்தாளர் கரூர் இரா.பழனிச்சாமியிடமிருந்து அன்னா கிரானா உரிமையாளர் சிவகுமார் இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். மூன்றாவது பிரதியை மும்பை இலக்கியக் கூடத்தின் புரவலர் அமலா ஸ்டேன்லியிடமிருந்து மகிழ்ச்சி மகளிர் பேரவையிள் வெண்ணிலா சுரேஷ்குமார் பெற்றார்.

மும்பை இலக்கியக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளர் முருகன் இராஜனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில், மும்பை இலக்கியக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இறை.ச.இராஜேந்திரன், சமூகச் செயற்பாட்டாளரும் கவிஞருமான புதியமாதவி ஆகியோர் நூல் திறானாய்வுரைகளை நிகழ்த்தினர்.

மும்பை இலக்கியக் கூட புரவலர் எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன், இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர் எம்.கருண், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் மிக்கேல் அந்தோணி, ஜெரிமெரி தமிழ்ச் சங்க ஆலோசகர் ஜெ.பால்துரை, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத் தலைவர் மா.செல்வராஜ், ஜெரிமெரி தமிழ்ச் சங்க அறங்காவலர் குழுத் தலைவர் கோ.சீனிவாசகம், பீவண்டி கிளைக் கழகச் பொருளாளர் முஸ்தாக் அலி, அணுசக்தி நகர் கலை மன்ற செயலாளர் தேவராஜன் புலமாடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ, ஜெரிமெரி தமிழ்ச் சங்க செயலாளர் இரா.செந்தில்குமார், பொருளாளர் ச.முருகன், பம்பாய்த் திருவள்ளுவர் மன்றம் ஆசிரியர் குமார் செல்வம், கலாச்சார இயக்கத் தலைவர் கே.கண்ணன், பத்லாபூர் தமிழர் நலச் சங்க நிர்வாகி ஜெ.இரவிக்குமார் ஸ்டீபன், மதிமுக மும்பை துணை அமைப்பாளர் தமிழ்மணி பாலா, மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் நூலாசிரியரிடமிருந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் நூலாசிரியரான சண் தவராஜாவின் ஏற்புரை இடம்பெற்றது.

 

Leave A Reply

Your email address will not be published.