ஆளில்லா விமான தாக்குதலால் கதிலங்கும் ரஷ்யா.

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக கட்டிடங்களிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மொஸ்கோவை நோக்கி வந்த பல ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

எனினும் இந்த ஆளில்லா விமானங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

அதேசமயம் ரஸ்ய தலைநகர் மீது புகைமண்டலங்களையும் உடைந்த ஜன்னல் கண்ணாடிகளையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன

Leave A Reply

Your email address will not be published.