பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபா மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள்!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிய பொலிஸில் பணிபுரியும் திருமணமானவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஆண் பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் காதலித்த நிலையில், குறித்த பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்து கொள்வதாக ஆண் கான்ஸ்டபிள் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், பெண் கான்ஸ்டபிளிடம் ஆண் கான்ஸ்டபிள் ஒரு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்று வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.