தலைநகரில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழுப்பில் தனிப்பட்ட தகராறு காரணமாகத் தமிழர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 69 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக் காயங்களுக்குள்ளான நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையைச் செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.