வயோதிபர் ஒருவர் வெட்டிக்கொலை!

வயோதிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா, வெலிவேரிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபரின் சடலம் வீடொன்றினுள் இரத்த வெள்ளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

68 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிவேரிய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.