யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு முன்னேறியது

எபி விளையாட்டுக்கழகம் நடத்தும் யாழ்ப்பாண துடுபாட்ட சம்பியன் தொடரில் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்று அரைடத்திற்கு தகுதி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழக அணியினர் 34.2 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளை இழத்து 139 ஓட்டங்களை பெற்றது. இதில்
துவரகசீலன் 53 ஓட்டங்களையும் வினோத், 26 ஓட்டங்களையும்;, பெற்றனர்.பந்து வீச்சில் யாழ்.சென்றல் விளையாட்டுக்கழக அணி சார்பில் கரிகரன் சுபா தீசன். ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்

140 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுதாடிய யாழ். சென்றல் விளையாட்;டுக்கழக அணி 27.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழத்து 140 ஓட்டங்களை பெற்றனர்.
றஜீவ் 35 ஓட்டங்களையும் கிருசாந் 29 ஓட்டங்களையும், நிசாந் 16 ஓட்டங்களையும். பெற்றனர்
பந்து வீச்சில் மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழக அணி சார்பில் நிரேஷன் 4 இலக்குகளை வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.