கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்குப் பிணை!

பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் நால்வரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் மருதங்கேணியில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் நேற்று விசாரணைக்காகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான நால்வரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடிய நிலையில் கைதான நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.