பொலிஸ் மா அதிபரின் காலம் முடிவுக்கு வருகிறது.. புதிய பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்டவர்கள் பெயர்கள் இதோ …..

மூன்று மாத கால சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்கவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

மார்ச் 26-ம் தேதி ஓய்வு பெற இருந்த அவருக்கு அரசு மூன்று மாத கால நீட்டிப்பு வழங்கியது.

தற்போது அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, அஜித் ரோஹன, பிரியந்த வீரசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அடுத்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியதும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.ஜி.பி பதவிக்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்த பின் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பார்.

Leave A Reply

Your email address will not be published.