மயானத்தில் மருத்துவ கழிவுகள், பிரதேச சபையினர் போராட்டம்

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தின் பின்புறத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் டிப்பர் வாகனம் ஒன்றில் மருத்துவக் கழிவுகள் மயானத்திற்கு பின்பக்கமாக குழிகள் வெட்டப்பட்டு கொட்டப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சிலர் விசாரித்த போது டிப்பர் சாரதிகள் மழுப்பியுள்ளனர்.

ஆயினும் இன்று மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட குழியினை மூடுவதற்காக நான்கு பேர் மயானத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனை அவதானித்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மயானத்திற்குள் சென்று பார்வையிட்ட போது மருத்துவக் கழிவுகள் பல மாதக் கணக்கில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டும் வந்துள்ளது.

இதனையடுத்து நல்லூர் பிரதேச சபையினர் மற்றும் யாழ் மாநகர மாநகர சபை உறுப்பினர்கள் இனைந்து A9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். எனினும் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.