சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு.

கிளிநொச்சியில் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு.

வடமாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயற்பட்டு வருகின்ற சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான மேற்படி விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது .

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரனா அச்சுறுத்தலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பிலும் முதலுதவி பயிற்சி தெடர்பாகவும் குறித்த செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

வளவாளர்களாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின்உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற சமுதாயம் சார் சீர்திருத்தத்  திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற சீர்திருத்த உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.