சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி சாதனை.!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை மாணவி அருணா அவர்கள் பிரபல தமிழ் தொலைக்காட்சி விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு அறுபது லட்சம் வீடு மற்றும் பத்து லட்சம் ரொக்க பரிசு பெற்றுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்கிற சாதனை பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அருணா அவர்கள் நேற்று நடந்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார் இதுவரை நடந்து முடிந்த 9 சீசன்களில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற அருணா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. R.M. கதிரேசன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.