கடலில் குளிக்கச் சென்ற தாத்தாவும் பேரனும் சடலங்களாக மீட்பு!

புத்தளம் – நுரைச்சோலை இலந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தாவும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரும் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை – இலந்தையடி சவுக்குத் தோட்டத்துக்குச் சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் தாத்தா, அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காகக் கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.