சதித்திட்டம் மூலம் இந்த அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது! – சந்திரசேன எம்.பி. சூளுரை.

சூழ்ச்சிச் திட்டங்கள் மூலம் தற்போதைய அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் என்றும் அவர் கூறினார்.

அரசியல் சூழ்ச்சி மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதால் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிரணிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.