3 1/2 கோடி காப்புறுதி தொகைக்காக யாழ். – கொழும்பு சொகுசு பஸ் எரிக்கப்பட்டுள்ளது

கடந்த ஜூன் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.

பேருந்துக்கான மூன்று கோடி ரூபா காப்புறுதியைப் பெற்றுக்கொடுக்க அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையினால் பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பஸ் தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ் வந்த போது, ​​யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள கராஜ் ஒன்றில் விடப்பட்டு, அதிலிருந்த பெறுமதியான உதிரிபாகங்களும், உபகரணங்களும் மற்றும் சில கருவிகளும் அகற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அந்த உதிரிபாகங்கள் அனைத்தும் கேரேஜில் உள்ள சேமிப்பு அறையில் வைக்கப்பட்டு, பஸ் எரிவதற்கான ஒரு கருவி பொருத்தப்பட்டு, அதிக வெப்பம் அடைந்தவுடன் என்ஜினில் தீப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டமை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

தீப்பற்றி எரிந்த பேருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் மதுரங்குளி வரை வந்ததாகவும், புத்தளத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டபோது, ​​அதில் எந்த தவறும் இருக்கவில்லை என பயணிகள் பலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தத சந்தேகத்தில் , போலீஸார் மற்றும் மோட்டார் ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், இன்சூரன்ஸ் பெறுவதற்காக வேண்டுமென்றே பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஸ் தீ விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.