ஜம்மு-காஷ்மீரில் தேசிய கீதத்தை அவமதித்த 14 பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரில் தேசிய கீதத்தை அவமதித்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 25-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட நிலையில், ஒரு சிலர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தனர்.

இந்நிலையில், அவர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யத் தவறிய ஒரு சில காவல் துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.