ஆபாச நடிகைகளைப் போல் ஆடை உடுத்த கட்டாயப்படுத்திய கணவன் மீது வழக்கு..!

தனது 30 வயது மனைவியை ஆபாச படத்தைப் பார்க்கவும், அதில் வரும் நடிகைகளைப் போல உடை அணியவும் வற்புறுத்தியதாக டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தனது கணவர் ஆபாச படத்திற்கு அடிமையாகி இருப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஜோடி 2020-ல் திருமணம் செய்து கொண்டது என்று போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண் தனது புகாரில், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

”செவ்வாயன்று, சம்பந்தப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 498 A (பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர், அவரைக் கொடுமைப்படுத்துதல்), 406 (கிரிமினல் நம்பிக்கை மீறல்), 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்று துணை போலீஸ் கமிஷனர் ரோஹித் மீனா கூறினார்.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்கள் இந்த வழக்கில் அடுத்த நடவடிக்கைக்காக பாதுகாக்கப்படுகின்றன, என்றார்.

Leave A Reply

Your email address will not be published.