தேரர் மற்றும் இரு பெண்களை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது ?

பல்லேகம சுமண தேரர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்தில் நான்கு பேர் பொலிசாரினால் கைது.

கொழும்பு, நவகமுவை, ரகஷபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் வைத்து பல்லேகம சுமண தேரர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த தேரர் மற்றும் பெண் ஒருவரும் சிகிச்சைக்காக நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மற்றைய 22 வயதுடைய பெண்ணும் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.