காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்.

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.

குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர், போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அங்கு நேரில் சென்று திருத்தப்பணிகளை பார்வையிட்டதுடன், திருத்தப்பணிகளை விரைவு படுத்துவதுடன் அதுவரை பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் பணிப்புரை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.