நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை! – நீதி அமைச்சர் காட்டம்.

“நீதிமன்றத்தையோ – நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.