கேகாலையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்தார்.

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

துனமால பகுதியில் கப்ரக வாகனமொன்றில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் மீதே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தவர் துனமால இறப்பர் தோட்டக் காவலாளியாகப் பணியாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கலபிட்டமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.