வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு.

பல்கலைக்கழக மாணவி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்தே குறித்த மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய எஸ்.ஆர்.சுசந்திகா என்ற மாணவியே தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.