திருமணமாகி நான்கு மாதங்கள் – காய்ச்சலால் பெண் மரணம்.

திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்., கொல்லன்கலட்டியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது – 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மூன்று நாள் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை வலிகாமம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிலங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.