குழு மோதலில் 2 பேர் வெட்டிப் படுகொலை!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.