மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப மரணம்!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சோக சம்பவம் மதவாச்சியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஏ.சில்வெஸ்டர் என்ற 22 வயதுடைய மகன் சம்பவ இடத்திலும், வி.அன்ரனிதாஸ் என்ற 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.