புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு.

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.