மகாராஷ்டிரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி, 20 பேர் காயம்!

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

அமர்நாத் யாத்திரை முடித்துவிட்டு ஹிங்கோலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் என புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடஸ்னே தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

இந்த விபத்து சரியாக அதிகாலை 2.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை எண்.53-ல் உள்ள மல்காபூர் நகரில் உள்ள மேம்பாலத்தில் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்துகளில் ஒன்று அமர்நாத் யாத்திரையை முடித்துக்கொண்டு ஹிங்கோலிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மற்றொரு தனியார் பேருந்து நாசிக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நாசிக் நோக்கிச் சென்ற பேருந்து லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்று, மற்றொரு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.