பட்டம் பெற்ற அன்றே தற்கொலை செய்து கொண்ட மாணவி.

நேற்று (29) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சசிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்குணரத்தினம் கௌசிகா என்ற 27 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியின் தாயும் தந்தையும் குடும்பத் தகராறு காரணமாக தனித்தனியாக வசித்து வரும் நிலையில் குறித்த யுவதி தனது பெற்றோர் இருவரையும் பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்கள் அனைவரும் திரும்பி வந்த பின்னர், குடும்பச் சண்டை மீண்டும் மூண்டதையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், பின்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.