கொழும்பு விபத்தில் தமிழ் இளைஞர் பரிதாப மரணம்!

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இரத்மலானையில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய செல்வராசா கஜேந்திரன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த குறித்த இளைஞர், பெற்றோருடன் தெஹிவளையில் வசித்து வந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரில் அவர் மாத்திரமே பயணித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.