யாழ். இளம் குடும்பப் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

யாழ் புங்கன்குள புகையிரத நிலைய அருகாமையிலிருந்து , புகையிரதம் முன் பாய்ந்து திலீபன் பிரியா (27) எனும் இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து யுவதி தனது உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

New Update
யாழில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண் மரணம்!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவடைந்துள்ளார்.

அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மதியம் கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியே குறித்த பெண் சாவடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

எனினும், பெண்ணின் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.