மனைவியைக் சுட்டுக்கொன்ற கணவன் தானும் சுட்டு உயிர்மாய்ப்பு! – நுவரெலியாவில் பரபரப்பு.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் கணவர் சுட்டது தெரியவந்துள்ளது.

நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தல் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.