தொடரை தம் வசப்படுத்திக் கொண்டது ரெட்புள்ஸ் அணி

அரியாலை சனசமூக நிலைய இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘அரியாலை சனசமூக நிலைய துடுப்பாட்ட லீக்’ தொடரின் 6 இலக்கினால் வெற்றி பெற்று முதலாவது பருவ கால கிண்ணத்தை ரெட்புள்ஸ் அணி சுவிகரித்தது.

நேற்று ஞாயிற் கிழமை அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ரெட்புள்ஸ் அணியை எதிர்த்து க்ரீன் கொரொக்கட்டைல்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரெட்புள்ஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய க்ரீன் கொரொக்கட்டைல்ஸ் அணி
6 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஓர் இலக்கினை இழத்து 83 ஓட்டங்களை பெற்றது.
இதில் தேவா ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும், ஏகனந்தன் 34 ஓட்டங்களையும்,பெற்றனர்.

84 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ரெட்புள்ஸ் அணி 5.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஓர் இலக்கினை இழத்து 84 ஓட்டங்களை பெற்றது.

இதில் நிரேஷன் ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் கோபிராம் 30 ஓட்டங்களையும், பெற்றனர்.

ஆட்ட நாயகன் விருதை ரெட்புள்ஸ் அணி வீரர் நிரேஷனும், தொடராட்ட நாயகன் விருதை ரெட்புள்ஸ் அணியின் தலைவர் கோபிராமும் பெற்றுக் கொண்டார். சிறந்த பந்து வீச்சாளராக வைட் கோப்ராஸ் அணி வீரர் கபில் ராஜ
சும் பெற்றுக் கொண்டார்.

முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ்.மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுனர் வி.கே சண்முகலிங்கம் சிறப்பு விருந்தினராக ,அரியாலை சனசமூக நிலைய தலைவர் வி.சுதாகர், விருந்தினர்களாக கலந்து கொண்டனர். .

Leave A Reply

Your email address will not be published.