வவுனியாவின் இவ்வருட இரண்டாவது பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்.

இவ்வருடத்திற்கான இரண்டாவது பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலதீபன் திலீபன் அவர்களின் தலைமையில் வவுனியா பிரதேசச் செயலாளர் திரு. நா. கமலதாசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் இன்று (14.09.2020) சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சென்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.இது தவிர கல்வி,ஆசிரிய இடமாற்றம், வீட்டுத்திட்டம், இராணுவத்தினரிடமிருந்து மக்களுக்கான காணிகளை விடுவித்தல்,நெற் கொள்வனவு, மேய்ச்சல் தரைகள்,கிரவல் அகல்வு,கல்குவாரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விவசாய உற்பத்தி களை சந்தைப்படுத்துதல் சம்பந்தமான முக்கிய விடயங்களும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன், விணோநாகரலிஙகம் மற்றும் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.