வவுனியா இளைஞர் கொழும்பில் அடித்துப் படுகொலை!

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – மோதரையில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான அருணாசலம் அஜந்தன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 5 வருடங்களாகக் குடும்பத்தினருடன் தங்கி நின்று வேலை புரியும் குறித்த இளைஞர், நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.