முதல் டி20 போட்டி – 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது. பாரி மெக்கார்தி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். கேம்பர் 39 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

திலக் வர்மா டக் அவுட்டானார். ருதுராஜ் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.